Saturday 12 April 2014

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே... மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...


தினமும் காலை சங்கரா தொலைக்காட்சியில் நாமெல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பதுதான்... ஆனாலும் அலுப்பதில்லையே.... 

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த இம்மஹானை மீண்டும் மீண்டும் காணக் கண் கோடி வேண்டும்...

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா... 

Click/Copy this below link and paste to get the song about Mahaperiyavaa...
http://www.dailymotion.com/video/k207hqNeingkSq6Mhgk?start=25

ஆஹா....ஆனந்தம் பேரானந்தம்.....

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குருவே நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா...

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
குருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...