Saturday, 14 April 2012

அதிதி போஜன மகிமை - மஹா ஸ்வாமிகள்


பல
 வருடங்களுக்கு முன்புகாஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம்அன்று ஞாயிற்றுக் கிழமைதரிசனத்துக்கு ஏகக்கூட்டம்ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நக
ர்ந்தனர்ஒரு நடுத்தர வயதுத் ம்பதிஆச்சார்யாளை நமஸ்கரித்துழுந்துகை கூப்பி நின்றனர்

அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ஒரு வருஷத்துக்கு முன்னாலே வநதிருந்தே.அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் 

கொண்டேவினவினார்.


உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா.
நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி'
க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்சாப்பாடு போடஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே 
நடந்துண்டு வர்றது பெரியவா ! 


வயல்கள்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் றிச்சுப் போறதில்லைபிடிபடாம செலவாயிண்டிருந்த பணம்இப்போல்லாம் கைல தங்கறதுஎல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன் அதிதி போஜன மகிமை தான் 
பெரியவா....தினமும்செஞ்சுண்டிருக்கேன்வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். 

அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ்அதிதி போஜனம் பண்ணிவெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...து சரி.

இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் ண்ணி வெப்பா ?" என்றுகவலையுடன் விசாரித்தார்உடனே கோபாலனின் னைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான்பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரமசந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும்

பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும்அதிதிக்கு உபசாரம் பண்றதுஅப்டி ஒரு அநுக்கிரகத்தைப்பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே திதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார்தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார்ஸ்வாமிகள்இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழகியூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்றுகொண்டனர்அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் 
ஆச்சார்யாள்பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

ஒரு பக்தர்ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"

உடனே ஸ்வாமிகள், "ஆமாமாமோக்ஷ்த்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய ர்மம் அது ! ரொம்பப் பேருக்கு னுகூலம்பண்ணி இருக்கு !  இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான்  சொல்லுவாஅப்பேற்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்றுஉருக்கத்துடன்  சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை மஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேதுதிருவண்ணாமலை சொந்த ஊர்ஆச்சார்யாளைநாங் அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம்விஸ்தாரமா...நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம்பெரியவா கிருபை பணணணும் !" என்றார்


அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார்அனைவரும் மைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

"
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம்ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்)நிர்வாகம் பண்ணிண்டிருந்ததுஅப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா 
சொல்லப் போறேன்அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலேஇதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன்கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்

கும்பகோணத்து மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டுஅதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரிஒருத்தர் குடியிருந்தார்

நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோ தர்ம பத்தினி பேரு சிவகாமி ச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலேபள்ளத்துரச் சேர்ந்தவாஅந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கிடையாதுகடைத்தெரு மளிகைக் கடை பாத்துக்கறதுக்கு அவா 
ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வச்சிண்டுருந்தா.

குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பதுஅம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும்தா சர்வகாலமும் அவா ரெண்டு பேரோ வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும்வேற பேச்சேகெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துதுதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு 
 செட்டியாரே ஓட்டிண்டு போவார் !


நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்மமடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தாஅவாளப்பத்திஇதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன்பாருங்கோ..."


ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ?  அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றதுஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதிதினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும்அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சுபோஜனம் பண்ணி வெப்பா.   சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு,வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் க்காத்துவா.   அவா க்ருஹத்திலேமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் ந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா!   அதுலேயும்இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு 
கேட்டேள்னாவந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள்
தார்த்தங்கள்புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய்வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா !   அப்டி ஒரு ஒசந்த மனசுஇதெல்லாம்ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வே ஒரு ரகசியமும் இல்லேமடத்துக்கு ரொம்ப வேண்டியசுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோ கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார்அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதைஎல்லாம் ந்து சொல்லுவார்இப்ப புரிஞ்சுதா? " 

ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்ததுஉச்சி வேளைஒரு அதிதியக் கூடக் காணோம்கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப்படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார்.


அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார்அவரைப்பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார்


அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்குதேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார்கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரைஅழைச்சுண்டு போய் ஒக்கார 
வெச்சார் செட்டியார்சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி


செட்டியாரின் தர்ம பத்தினிசிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி 
புடிக்கும் ? சொல்லுங்கோகடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப்போட்டுடறேன்என்று கேட்டார்.  சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பககம் போய்ப் பார்த்தார்கொள்ளையிலேநிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார்உள்ளே ந்தார்.    'வேற ஒண்ணும் வேண்டாம்மொளக்கீ கூட்டும்கீரத் தண்டுசாம்பாரும் பண்ணாப் போறும்'னார்


கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார்
அப்போ மழையும் விட்டுடுத்துநாழி ஆயிண்டே போச்சுசிவனடியார்க்கோ நல்ல பசிகீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமாமுடியுமேங்கற எண்ணத்துலேதானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா.

பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டுதட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா.  ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினாரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா

அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானேஒரே பாத்திரத்துலேபோட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளேனு கொழம்பினார்.  சித்த நாழி கழிச்சுகீர வாணலிஇரணடையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மாசிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்குநிவேதனம் பண்ணினா.   இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! 


அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?'நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி.
அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டுநிவேதனம் பண்ணறானுதீர்மானிச்சுண்டுட்டார்.   இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம்பண்ணிண்டார்."

"போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந் சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த ஆச்சிகிட்டே 
கேட்டுட்டார்.

ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன்என் ர்த்தா 'சிவ..சிவனு சிவநாமத்தை சொல்லிண்டே பறிச்சார்அதுஅப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.   திரும்ப நிவேதிக்க வேண்டிய வசியம் இல்லேநீங்கஒண்ணுமே சொல்லாம பறிச்சேள்அதனாலே தான் னியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம்பண்ணினேன்னு சொன்னா

இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்துரொம்ப சங்கோஜப் பட்டுண்டார்தம்பதி ரெண்டு பேரும்சிவனடியாரை மஸ்காரம் பண்ணினாஆசீர்வாதம் ண்ணிப்டுஅந்த ஆச்சியோட பக்தியையும்புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப்புறப்பட்டார்அப்டி அன்னம் (சாப்பாடுபோட்ட ஒரு ம்பதி அவா..."
நிறுத்தினார் ஆச்சார்யாள்

பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்ததுஒருவரும் வாய் திறக்கவில்லை

ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படிவிடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்என்ன தெரியுமா ?
சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்திஎல்லாம் அவா பண்ணிண்டாஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணாவீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்குனுசொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா.  பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும்அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார்அவ்வளவு தான்.

அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய'-த்த அடஞ்சுட்டாஅதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்குஅந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவியப் பார்த்தேளா ?

இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..." முடித்தார் ஆச்சார்யாள்கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்ததுஇடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்குஎல்லோருக்கும் 
சிக்கும்போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோஎனக்கருணையுடன் அனுப்பி வைத்தது.


பக்தி என்பதுபண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாதுநாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல்சர்வசதா காலம் அவனிடம் ோய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாதுஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே தற்குத் தான் பக்தி என்று பெயர்.

Wednesday, 11 April 2012

அருள் மழை - 38 - மஹா பெரியவாள் - எச்சில் தோஷம்


இன்றைய ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹச்தியை அறியாதவர்கள் இருக்க முடியாது பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான வாயு ஸ்தலமான இங்கு மலையடிவாரத்தில் ஈஸ்வரன் காலஹஸ்தீஸ்வரராக கோயில் கொண்டுள்ளார் சிலந்தி சர்ப்பம் யானை மூன்றும் இங்கு முக்தி பெற்றதால் இத்தளம் திருகாளஹஸ்தி என்று அழைக்க படுகின்றது .

இவ்வளவு சிறப்பு மிக்க காளஹஸ்திக்கு மகா... பெரியவா ஒருமுறை சென்றபோது அங்கிருந்த ஒரு பக்தர் பெரியவாளிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார் அவருடைய வீடிற்கு வரவேண்டும் என்று .


ஒருநாள் அந்த பக்தர் பூஜை அறையில் தனது பூஜையை முடித்துவிட்டு நெய்வேதியதுக்காக வைத்திருந்த கல்கண்டில் ஒரு பிடி எடுத்து வாயில் அள்ளி போட்டதுதான் தாமதம் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது வெளியே வந்து எட்டி பார்த்தவர் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போனார் வெளியே வந்தது சாக்க்ஷாத் மகா பெரியவாள் .


வாய் நிறைய கற்கண்டை குதப்பிக் கொண்டிருந்ததால் அவரால் வாய் திறந்து பெரியவாளை வரவேற்க முடியவில்லை .பெரியவாளை பலமுறை வீட்டிற்கு வாருங்கள் என்று தாம் அழைத்தும் வீட்டின் முன்னே வந்து நிற்கும் அவரை வாருங்கள் வாருங்கள் என்று அழைக்க முடியவில்லையே என்ற தவிப்பில் தத்தளித்தார் .


அப்போது மகான் நான் வந்த நாள் முதல் ஆத்துக்கு வாங்கோன்னு நீ கூப்டாத நாளில்லை , இப்போ உங்காத்துக்கு வந்து வாசல்லையே நினுண்டிருக்கேன் உள்ள வாங்கன்னு சொல்லாம மச மசன்னு நிக்கறியே என்று கட்டளயிட்டார்


பக்தருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பெரியவா அருகில் இருக்க வாயில் இருந்த கற்கண்டை கீழே உமிழ்ந்துவிட்டார் எங்கே தான் உமிழ்ந்த எச்சில் மகான் மீது பட்டிருக்குமோ என்று பதட்டமடைந்து அபசாரம் பண்ணிட்டேன் , அபசாரம் பண்ணிட்டேன் என்று கூறி வாயில் போட்டுகொண்டார் .


இதை புரிந்துகொண்ட மகான் இப்ப என்ன அயிடுத்து ஏன் பதற்ற இக்காலஹச்தியில் கண்ணப்பநாயனார் சிவபெருமானுக்கு எப்படி பூஜை பண்ணினான்னு தெரியுமா வாயில் ஜலதைக் கொண்டுவந்து சிவ லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தான் , மாமிசத்தை வாயில் சுவைத்து நெய்வேத்தியம் பண்ணினான் அவன் செய்த செயல் நமக்கு தவறாக தோன்றினாலும் பகவானுக்கு அது தவறாக தெரியவில்லை .


ஆசார்யாள் (ஆதிசங்கரர்) சிவானந்த லஹரியில் ஆனானபட்டவன் பூஜையெல்லாம் பாராட்டாமல் காட்டில் வாழ்ந்த கண்ணப்பன் பக்தியைத்தான் பெரிசா சொல்லறார் . அப்பேற்பட்ட கண்ணப்பன் வாழ்ந்த திருத்தலம் இது இங்க நமக்கு எச்சில் தோஷம் வராது என்றார் மகா பெரியவா

இதற்கு பிறகுதான் அந்த பக்தன் சமாதானம் அடைந்தார் 

Monday, 9 April 2012

அருள் மழை - 37 - மஹா பெரியவாள் - பத்மாவதி கல்யாணம் - Padmavathi Kalyanam


பத்மாவதி பரிணயம் மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, நான்கு பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள்.


இளவயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.


கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு, முப்பது
தென்னைகள்.'தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்'
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..


மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.


ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.


"பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது. அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,


மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது...பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி, அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்..." தொண்டை அடைத்துக் கொண்டது. மென்று விழுங்கினார் "அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம். பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்.கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்..."

பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.


ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.'கவலைப்படாதே' என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே பெரியவாள்.


வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..


"பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.

என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே. அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?"


பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?"


"சொன்னேனே; பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!"


பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்"
ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா... பெரியவாளுக்குத் தெரியுமே"


"கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே காரியத்தைப் பார்...வரட்டுமா"

அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில் தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில் ஒரு டாலர்; பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.'உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள். 
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில் ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.
பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால் பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.


இன்றக்கு என்ன,இப்படி?


அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?


ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,"மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்" என்று இரைந்து சொன்னார்.


பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்புகிற மாதிரி பட்டது.


பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு, வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.
"திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா, ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்..." பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம் கொடுத்துப் பேசவில்லை.

தரிசனத்துக்கு வந்த பாட்டிகள், குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள். அரை மணி ஆயிற்று. "சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா..." என்று நினையூட்டினார் பாலு. "ஹி......ஹி......ஆமாம்......பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்....."அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.
"முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ...." உள்ளே போய் விட்டார்கள், பெரியவாள்.எல்லாருககும் ஆச்சர்யமாக இருந்தது.


ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும் தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?


திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்' என்கிறார்களா?


"பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?"
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!


இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.


"கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார். 'கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன் பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு'ன்னார்."
"தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார். "சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்."
"அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட கண்டதில்லே...."
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!


"என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா? புத்திரிக்குக் கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?" பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.


"...மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான சௌ.பத்மாவதியை.." விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி... பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.


"பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்...அண்ணா பொறுப்பிலே நடக்கிறது...உங்களைப் பார்த்தால்,அண்ணா சந்தோஷப்படுவார்..." தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு. இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள் காதருகில் மீண்டும் ஒலித்தன.


'முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ..."


"எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் 'பத்மாவதி' என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.


தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு வைத்துக் கொண்டால் போதும்.!
திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!

சங்கரா! போற்றி...போற்றி

மகா பெரியவா திருவடிகள் சரணம் - "ஹர ஹர சங்கர - ஜெய ஜெய சங்கர"...!!!

Saturday, 7 April 2012

அருள் மழை - 36 - மஹா பெரியவாள் - சகோதரி பையன் (Charity Begins at home)

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.
பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்… திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர்.

அதற்கு அவர், “நான் அயோக்கியன்… அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்…

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

Monday, 2 April 2012

அருள் மழை - 35 - மஹா பெரியவாள் - மகாப்பெரியவரின் தேசப்பற்று - தீக்ஷையில் மூன்று வகை (Deekshai)

தீக்ஷையில் மூன்று வகை உண்டு.
நயன தீக்ஷை:
உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால் கடாக்ஷிப்பது. அந்த கடாக்ஷத்தை உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறதோ இல்லையோ, அந்த கடாக்ஷமே தன் வேலையை செய்ய ஆரம்பித்து விடும். மீன், தன் குஞ்சுகளை பார்வையாலேயே ரக்ஷிப்பது போன்றது மஹான்களின் திருஷ்டி. அதனால்தான் நம்... குழந்தைகளை மஹான்களின் சன்னிதானத்திற்கு அழைத்துப் போவது. அக்குழந்தைகளுக்கு மஹான்கள் யாரென்று கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் மேல் சூழ்ந்துள்ள தோஷங்களை நிவர்த்திக்கும் சக்தி அந்த திருஷ்டிக்கு உண்டு.
காஞ்சி மகாபெரியவாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பெண் இருந்தாள். அவளுடைய புருஷனுக்கோ, கடவுள், மஹான்கள், கோவில் என்று எதிலுமே நம்பிக்கை இல்லை. அதிலும் மஹான்கள் எல்லோருமே நம்மை போல் சாதாரண மனிதர்கள்தான்! என்ற ஒரு பேதைமை உண்டு. ஒருமுறை அந்த அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் பெரியவாளை தரிசனம் பண்ண ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் போட்ட நிபந்தனை "நா அங்க வருவேன். pant shirt தான் போட்டுப்பேன். பஞ்சகச்சம் விபூதி எதுவும் கெடையாது. அவரை நமஸ்காரம் பண்ண மாட்டேன். உனக்காக வரேன் ஆனா,அவரைப் பாக்க மாட்டேன். தள்ளிதான் நிப்பேன்". பாவம் அந்த அம்மா ஒத்துக் கொண்டாள். போனார்கள். அவர் காலில் போட்டிருந்த ஷூவைக் கூட கழற்றவில்லை. அந்த அம்மா மானசீகமா பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணினாள் கணவருக்கு நல்ல புத்தி வேண்டி. நம்ம பெரியவா சாக்ஷாத் தாயாரில்லையா? "நீ பாக்காட்டா என்ன? நான் ஒன்னைப் பாக்கறேன்" என்று சொல்லுவதுபோல், மேனாவுக்குள் இருந்து லேசாக எட்டி அந்த மனுஷனைப் பார்த்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாள் கழித்து கணவர் "வாயேன்...போய் மடத்ல ஸ்வாமியை பார்த்துட்டு வருவோம்". சாதாரண வேஷ்டி, ஷர்ட், லேசான விபூதி கீற்று! கொஞ்சநாள் கழித்து, பஞ்சகச்சம், குடுமி வைத்துக் கொள்ள ஆரம்பித்து, நாட்கள் செல்ல செல்ல, அந்த அம்மாவை விட பெரியவா மேல் பித்தாகிப் போனார். வேலையை விட்டார். பெரியவா படத்தை வைத்துக் கொண்டு சதா பஜனை, தியானம் என்று பரம பக்தராக மாறிவிட்டார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால்.......பெரியவா அன்று ஒரே ஒரு தடவை அவரை கடாக்ஷித்ததுதான்! அப்புறம் ஒரு வார்த்தை பேசக் கூட இல்லை! மஹான்களின் திருஷ்டி பிரபாவம்!