Saturday 14 April 2012

அதிதி போஜன மகிமை - மஹா ஸ்வாமிகள்


பல
 வருடங்களுக்கு முன்புகாஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம்அன்று ஞாயிற்றுக் கிழமைதரிசனத்துக்கு ஏகக்கூட்டம்ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நக
ர்ந்தனர்ஒரு நடுத்தர வயதுத் ம்பதிஆச்சார்யாளை நமஸ்கரித்துழுந்துகை கூப்பி நின்றனர்

அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ஒரு வருஷத்துக்கு முன்னாலே வநதிருந்தே.அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் 

கொண்டேவினவினார்.


உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா.
நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி'
க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்சாப்பாடு போடஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே 
நடந்துண்டு வர்றது பெரியவா ! 


வயல்கள்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் றிச்சுப் போறதில்லைபிடிபடாம செலவாயிண்டிருந்த பணம்இப்போல்லாம் கைல தங்கறதுஎல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன் அதிதி போஜன மகிமை தான் 
பெரியவா....தினமும்செஞ்சுண்டிருக்கேன்வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். 

அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர்உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ்அதிதி போஜனம் பண்ணிவெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...து சரி.

இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் ண்ணி வெப்பா ?" என்றுகவலையுடன் விசாரித்தார்உடனே கோபாலனின் னைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான்பெரியவா வந்திருக்கோம்.  ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரமசந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும்

பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும்அதிதிக்கு உபசாரம் பண்றதுஅப்டி ஒரு அநுக்கிரகத்தைப்பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே திதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார்தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார்ஸ்வாமிகள்இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழகியூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்றுகொண்டனர்அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் 
ஆச்சார்யாள்பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

ஒரு பக்தர்ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"

உடனே ஸ்வாமிகள், "ஆமாமாமோக்ஷ்த்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய ர்மம் அது ! ரொம்பப் பேருக்கு னுகூலம்பண்ணி இருக்கு !  இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான்  சொல்லுவாஅப்பேற்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்றுஉருக்கத்துடன்  சொல்லி முடித்தார்.

ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை மஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேதுதிருவண்ணாமலை சொந்த ஊர்ஆச்சார்யாளைநாங் அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம்விஸ்தாரமா...நாங்கள்ளாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம்பெரியவா கிருபை பணணணும் !" என்றார்


அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார்அனைவரும் மைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:

"
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம் வருஷம்னு ஞாபகம்ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்)நிர்வாகம் பண்ணிண்டிருந்ததுஅப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா 
சொல்லப் போறேன்அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலேஇதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன்கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்

கும்பகோணத்து மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டுஅதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரிஒருத்தர் குடியிருந்தார்

நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோ தர்ம பத்தினி பேரு சிவகாமி ச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலேபள்ளத்துரச் சேர்ந்தவாஅந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கிடையாதுகடைத்தெரு மளிகைக் கடை பாத்துக்கறதுக்கு அவா 
ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வச்சிண்டுருந்தா.

குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பதுஅம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும்தா சர்வகாலமும் அவா ரெண்டு பேரோ வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும்வேற பேச்சேகெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துதுதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு 
 செட்டியாரே ஓட்டிண்டு போவார் !


நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்மமடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தாஅவாளப்பத்திஇதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன்பாருங்கோ..."


ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ?  அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றதுஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதிதினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும்அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சுபோஜனம் பண்ணி வெப்பா.   சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு,வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் க்காத்துவா.   அவா க்ருஹத்திலேமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் ந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா!   அதுலேயும்இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு 
கேட்டேள்னாவந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள்
தார்த்தங்கள்புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய்வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா !   அப்டி ஒரு ஒசந்த மனசுஇதெல்லாம்ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வே ஒரு ரகசியமும் இல்லேமடத்துக்கு ரொம்ப வேண்டியசுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோ கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார்அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதைஎல்லாம் ந்து சொல்லுவார்இப்ப புரிஞ்சுதா? " 

ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்ததுஉச்சி வேளைஒரு அதிதியக் கூடக் காணோம்கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப்படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார்.


அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார்அவரைப்பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார்


அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்குதேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார்கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரைஅழைச்சுண்டு போய் ஒக்கார 
வெச்சார் செட்டியார்சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி


செட்டியாரின் தர்ம பத்தினிசிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி 
புடிக்கும் ? சொல்லுங்கோகடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப்போட்டுடறேன்என்று கேட்டார்.  சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பககம் போய்ப் பார்த்தார்கொள்ளையிலேநிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார்உள்ளே ந்தார்.    'வேற ஒண்ணும் வேண்டாம்மொளக்கீ கூட்டும்கீரத் தண்டுசாம்பாரும் பண்ணாப் போறும்'னார்


கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார்
அப்போ மழையும் விட்டுடுத்துநாழி ஆயிண்டே போச்சுசிவனடியார்க்கோ நல்ல பசிகீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமாமுடியுமேங்கற எண்ணத்துலேதானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா.

பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டுதட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா.  ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினாரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா

அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானேஒரே பாத்திரத்துலேபோட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளேனு கொழம்பினார்.  சித்த நாழி கழிச்சுகீர வாணலிஇரணடையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மாசிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்குநிவேதனம் பண்ணினா.   இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! 


அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?'நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி.
அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டுநிவேதனம் பண்ணறானுதீர்மானிச்சுண்டுட்டார்.   இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம்பண்ணிண்டார்."

"போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந் சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த ஆச்சிகிட்டே 
கேட்டுட்டார்.

ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன்என் ர்த்தா 'சிவ..சிவனு சிவநாமத்தை சொல்லிண்டே பறிச்சார்அதுஅப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.   திரும்ப நிவேதிக்க வேண்டிய வசியம் இல்லேநீங்கஒண்ணுமே சொல்லாம பறிச்சேள்அதனாலே தான் னியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம்பண்ணினேன்னு சொன்னா

இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்துரொம்ப சங்கோஜப் பட்டுண்டார்தம்பதி ரெண்டு பேரும்சிவனடியாரை மஸ்காரம் பண்ணினாஆசீர்வாதம் ண்ணிப்டுஅந்த ஆச்சியோட பக்தியையும்புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப்புறப்பட்டார்அப்டி அன்னம் (சாப்பாடுபோட்ட ஒரு ம்பதி அவா..."
நிறுத்தினார் ஆச்சார்யாள்

பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்ததுஒருவரும் வாய் திறக்கவில்லை

ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படிவிடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்என்ன தெரியுமா ?
சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்திஎல்லாம் அவா பண்ணிண்டாஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வரஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணாவீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்குனுசொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா.  பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும்அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார்அவ்வளவு தான்.

அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய'-த்த அடஞ்சுட்டாஅதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்குஅந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவியப் பார்த்தேளா ?

இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன்அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..." முடித்தார் ஆச்சார்யாள்கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்ததுஇடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்குஎல்லோருக்கும் 
சிக்கும்போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோஎனக்கருணையுடன் அனுப்பி வைத்தது.


பக்தி என்பதுபண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாதுநாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல்சர்வசதா காலம் அவனிடம் ோய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாதுஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே தற்குத் தான் பக்தி என்று பெயர்.

No comments:

Post a Comment