Monday 23 July 2012

பெரியவாளும் - ரோஜா மாலையும்

 


பெரியவாளிடம் அத்யந்த  பக்தி கொண்டது  திரு நடராஜ சாஸ்த்ரிகள்  குடும்பம்அவர்  தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம்பெரியவா தஞ்சாவூரில் முகாம்பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும்  என்று கொள்ளை ஆசை
பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு

 குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லிபெரியவாளை தர்சனம்  பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார்.  

ஆனால்இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்மாலையோடு வீடு திரும்பினார்அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானேஇந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ.    பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள்.


 "இல்லேஇல்லேஅம்பாளும் பெரியவாளும் வேற வேற இல்லேதான்ஆனாலும்இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்ஆமாஇது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டுஅதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.


மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்பெரியவா மேலவீதி சங்கர மடத்தி லிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்துநடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில்  உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக  தெருவே திமிலோகப்பட்டதுசாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு!



"பெரியவா வராபெரியவா வராதர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தாபாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம்குத்துவிளக்குபுஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்பெரியவாளுடைய வேகம் அப்படி

 இருக்கும்

குள்ள உருவமாக இருந்தாலும்அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல் இருக்கும்ஆனால்கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும்அந்த வேகம்உண்மையான மஹான்களுக்கே ரித்தான லக்ஷணம்!
பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டுசற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்துரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய்முன்தினம்  "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டுஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி லாவகமாகயானை தும்பிக்கையால் தூக்குவது போல்அருட்கரத்தால் தூக்கிதானே தன் தலையில் சூடிக் கொண்டார்!
சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழியவிக்கித்து நின்றனர்ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்இப்படி ஒரு பரமகருணையாஎன்று சொல்லமுடியாத ஆனந்தம்திக்கு முக்காடினார்கள்எல்லாரும் நமஸ்கரித்ததும்விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார்
சற்று நின்று திரும்பி,  "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்அவ்வளவுதான்ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லிஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார்
இதோஅவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா 'வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்!  ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
 பகவான் ஸர்வவ்யாபிஎன்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக ண்டார்கள்உணர்ந்தார்கள்!

No comments:

Post a Comment