Saturday 10 March 2012

பகவானிடம் கூறி பலனடையுங்கள்--காஞ்சிப்பெரியவர்

வெள்ளை அடிச்சு கொடுங்க!



* பொங்கல் என்றால் அவரவர் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்து சுத்தப்படுத்துவதோடு, வசதி இல்லாதவர்களுக்கும் இந்த உதவியைச் செய்து கொடுக்க வேண்டும்.


* நல்ல மனமுள்ளவர்கள், ஒருவரைப் பூஜை செய்கிறார்கள் என்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும், ரொம்ப நல்ல மனம் படைத்தவராகத்தான் இருப்பார்.


* இறைவனுடைய புகழை நாம் பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகிறோம். அவன் அருள் இல்லாமல் உலகம் இயங்காது.


* கஷ்டங்களை கண்ட இடங்களில் கூறாமல், கேட்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ என்றில்லாமல், பகவானிடம் கூறி பலனடையுங்கள். 
 

* நடிகன் பல வேஷம் போட்டாலும், ஆள் ஒருத்தன் தான். அதேபோல் எத்தனை ஜீவராசிகள் இருந்தாலும், அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள் சுவாமி ஒருத்தர் தான். 


* கவலை, குறை மட்டும் தான் பாரம் என்றில்லை, தன்னைப்பற்றிய பெருமையும் பெரிய பாரம் தான். அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.


-காஞ்சிப்பெரியவர்

No comments:

Post a Comment